சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் DIRC கூட்டம்.!
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக யாழ். சர்வ மதக் குழு உடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் DIRC கூட்டமானது இன்றையதினம் (18.06.2026) யாழ். மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தினை தேசிய சமாதான பேரவையின் திட்ட உத்தியோகத்தர் முனிஃப் ரஹ்மான் நெறிப்படுத்தினார்.
அத்துடன் சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ச.செந்துராசவால் நல்லிணக்க செயற்பாடுகளை ஏற்படுத்த யாழ் மாவட்ட சர்வ மத குழு செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்ப உரையை யாழ். மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெரோ செல்வநாயகம் அடிகள் நிகழ்த்தினார்.
இதில் பல்வேறு மதத்தலைவர்களும் யாழ். மாவட்ட சர்வ மத குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.


