பாடசாலை மாணவன் ஒருவர் உயிர்மாய்ப்பு.!
நேற்று 1 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் உள்ள 19 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மாமரத்தில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் உடலை பார்வையிட்ட பின்னர் ஹட்டன் தடயவியல் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
தடயவியல் பொலிஸார் தடயங்களை சேகரித்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று 2 ஆம் திகதி கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இச் சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.