கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதி சேதம் – பொதுமக்கள் அச்சம்!
கினிகத்தேன -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியாகல சந்தி பகுதியில் கினிகத்தேனவை நோக்கிச் செல்லும் பேருந்து தரிப்பிடத்தில் முன்னாள் உள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்து புதைந்து உள்ளதால், அந்த தரிப்பிடத்தில் உள்ள பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மழை நாட்களில், சாலையில் பாயும் மழைநீர் இந்த உடைந்த இடத்திலிருந்து உள் நோக்கிப் பாய்கிறது. இதனால், பேருந்து தரிப்பிடத்தின் சாலையும் புதைந்துபோகும் அபாயம் அதிகமாக உள்ளது.
இப்போதெல்லாம் பெய்துவரும் கனமழையால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ்நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

