உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு கோரிக்கை

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தித் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு சூரிய சக்தி மின் நுகர்வோரிடம் தேசிய மின் கட்டமைப்பு ஆபரேட்டர் தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டமைப்பின் பாதுகாப்பிற்காக, நுகர்வோர் தங்களின் சூரிய மின் உற்பத்தித் தகடுகளைத் தானாக முன்வந்து தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, நேற்றைய தினம் (30) நாட்டின் பல பகுதிகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகக் கொழும்பு உட்படப் பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகப் பதிவாகியிருந்தது.

வெசாக் பௌர்ணமி தினம் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, தேசிய மின் கட்டமைப்பிற்கான மின்சாரத் தேவை, கணிக்கப்பட்ட அளவை விட மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை, சூரிய மின் உற்பத்தித் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த இரண்டு காரணங்களினாலேயே நேற்றைய தினம் தேசிய மின் கட்டமைப்பில் சமநிலையின்மை ஏற்பட்டது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, நேற்றைய தினமும் பிற்பகல் 3.00 மணி வரை கூரைகளில் சூரிய மின் உற்பத்தித் தகடுகளைக் கொண்டுள்ள உரிமையாளர்களை, அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0