உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கை மிக நம்பகமான நாடு; முதலீடு செய்ய முன்வாருங்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

“இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு திறந்த, அதேநேரத்தில் நம்பகத்தன்மைமிக்க கூட்டுறவு நாடாகும்” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு ITC Ratnadipa ஹோட்டலில் நேற்று ஆரம்பமான “இலங்கை – ஜேர்மன் வர்த்தக மாநாடு 2026” (Sri Lanka – German Business Forum 2026) நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள ஜேர்மன் தூதரகத்தின் கூட்டு ஒத்துழைப்புடன் மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகின்றது. கடல்சார் மற்றும் வழங்கல் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடமாக இலங்கையை சர்வதேச மட்டத்தில் ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

இம்மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி, புத்தாக்க வலுசக்தி மற்றும் பொருளாதார பரிவர்த்தனை ஆகிய துறைகளில் ஜேர்மனி வழங்கி வரும் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

தற்போது இலங்கை, பேரினப் பொருளாதார நிலைத்தன்மையையும், கூடுதல் போட்டித்தன்மை மிக்க பொருளாதார மாதிரியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரசு நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீரமைப்புகள் மற்றும் நல்லாட்சிசார் சீர்திருத்தங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. இச்செயல்முறைகளின் போது பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்ற மூலோபாய முக்கியத்துவமிக்க புவியியல் அமைவிடம், திறமையான தொழிலாளர் படை மற்றும் மேம்பட்டு வரும் முதலீட்டுச் சூழல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஜேர்மன் வணிக சமூகத்தினர் இலங்கையுடன் புதிய வர்த்தகக் கூட்டாண்மைகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது பகிரங்க அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி ஃபெலிக்ஸ் நியூமன், இலங்கையின் ஜேர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதி சபையின் பிரதான பிரதிநிதி மார்ட்டின் க்ளோஸே ஆகியோருடன் இரு நாடுகளினதும் உயர் அரச உத்தியோகத்தர்களும், முன்னணி வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0