உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாடளாவிய ரீதியில் நேற்று மட்டும் 948 பேர் போதைப் பொருட்களுடன் கைது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் நேற்று மட்டும் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று நாடு முழுவதும் விசேட தேடுதல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் கடுமையான போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற விசேட தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியுள்ள நால்வர், நீதிமன்ற அனுமதியுடன் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 588 கிராம் ஹெரோயின், 908 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 1 கிலோகிராம் 678 கிராம் கஞ்சா, 599 கஞ்சா செடிகள், 101 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2ஆயிரத்து 414 போதை மாத்திரைகள், 74 கிராம் மதனமோதகம் மற்றும் 53 கிராம் மாவா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காக முப்படைகள், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசியத் திட்டம் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0