வீதி விதிமுறைகளை மீறிய 40 ற்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைப்பற்றல்!
கிளிநொச்சியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காத 40க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த வாகனங்கள் கைப்பற்றப் பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அதிக வேகத்துடன் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை தலைக்கவசம் இன்மை மற்றும் வீதி விபத்துக்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் உரிமையாளரிடம் குறித்த வாகனங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்