உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டச் சிக்கல்களை ஒரே நாளில் திருத்த முடியும்; மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது அரசு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
45 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமல்ல, சட்டச் சிக்கல்களே காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் முற்றாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் சாகர காரியவசம் மேலும் தெரிவித்ததாவது:-

“சட்டச் சிக்கல்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, தேர்தலைத் தள்ளிப்போடவே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. கடந்த காலங்களில் இதே சட்டச் சிக்கல்களைப் பேசிக்கொண்டே தேர்தல்கள் முடக்கப்பட்டன.

தற்போது மூன்றிலிரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டுள்ள இந்த அரசுக்கு, அந்தச் சட்டச் சிக்கல்களை ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் திருத்த முடியும். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்துவது, தற்போதைய அரசியல் சூழலில் தேர்தலை எதிர்கொள்ள அரசு அஞ்சுவதையே காட்டுகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0