கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!
சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ பிரிவில் உள்ள இருவர் வீட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் எரிவாயு வெற்று சிலிண்டர் கொள்ளை இட்டு சென்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வீட்டார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதன்போது அப் பகுதியில் தொடர்ந்து இவ்வாறான கொள்ளையில் ஈடுபட்டு வந்த 21, 38 வயதுடைய நிரோஜன், திலீபன் என்ற இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சாமிமலை கவரவலை ஏ பிரிவை சேர்ந்தவர்கள்.
இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 18 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டதுடன் எரிவாயு வெற்று சிலிண்டரும் மீட்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நேற்று 25 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் அவர்கள் இவர்கள் இருவரையும் எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருடப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
