உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பணி முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அனுராதபுரம், மதவாச்சிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை காட்டு யானை ஒன்று திடீரெனத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். நேற்று திங்கட்கிழமை மாலை தனது பணி முழுவதையும் முடித்துக்கொண்டு, வழமை போல பேருந்து மூலம் மதவாச்சிக்கு வந்து இறங்கியுள்ளார். பேருந்து நிறுத்தத்திலிருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக, அங்கிருந்த வயல் வெளிப் பாதையூடாக அவர் நடந்து சென்றுள்ளார்.

இதன்போது, அந்த வயல் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று, திடீரென அந்த நபரை நோக்கி ஓடிவந்து மிகக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

காட்டு யானையின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு இலக்காகி, பலத்த காயமடைந்த நிலையில் அந்தப் பகுதியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன், குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாகத் திகழ்ந்த இவரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதவாச்சி கிராம மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

34 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0