உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தில் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினரின் ஏற்பாட்டில் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான நில உரிமை தொடர்பான ஒருங்கிணைந்த கள விஜயமும் ஒன்றிணைவு கலந்துரையாடலும் இன்று (13.05.2026) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புகள், நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நில உரிமைக்காக செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு, கொக்குத்தொடுவாய், வாட்டுவாகல் மற்றும் வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த காணி உரிமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்திருந்தனர்.

இதன்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் நில மீட்பிற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேலும், முல்லைத்தீவு மக்களினால் தங்களது ஆதரவும் ஒற்றுமையும் வெளிப்படுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் போது குருந்தூர் மலை விவகாரம், கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் இடம்பெற்று வரும் நில அபகரிப்புகள், கேப்பாப்பிலவு மக்களின் காணி மீட்பு போராட்டம், வாட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

அத்துடன், இனிவரும் காலங்களில் நில மீட்பிற்காக வடகிழக்கை இணைக்கும் செயலணியாக ஒருங்கிணைந்து செயற்படுவது தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் மற்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0