பெருந்தொகையான பீடி இலைகளுடன் இருவர் கைது.!
கற்பிட்டி – ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கற்பிட்டியின் ஆலங்குடா கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு ஆய்வு செய்யப்பட்டது.
இதன்போது, இரண்டு சந்தேக நபர்களும், அந்தப் படகும், அத்துடன் அந்தப் படகினுள் இருபது பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 622 கிலோகிராம் பீடி இலைகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கடற்படையால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேக நபர்கள், ஆனவாசல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 30 வயதுடையோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் ஆகியவற்றை புத்தளம் கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.