உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் – கட்சி தலைவருக்கு கடிதம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான தெய்வேந்திரம் இந்திரதாஸ் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி தெய்வேந்திரம் இந்திரதாஸ் ஆகிய நான் தெரியப்படுத்துவது யாதெனில்,

2018ம் ஆண்டு முதல் எனது சொந்த நிதியினால் VP அறக்கட்டளை எனும் நிர்வாகத்தை ஸ்தாபித்து தற்சமயம் வரை செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இவ் அறக்கட்டளையில் 2019ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட வேலாயுதம் கரிகாலன் என்பவர் 2025ம் ஆண்டு அவராகவே பணியிலிருந்து விலகினார். பணியிலிருந்த காலத்திலும் அதன் பிற்பாடும் எனது அறக்கட்டளை மற்றும் shinedas pvt ltd கம்பெனிக்கு சொந்தமான நிதி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக இவர் கையாடல் செய்துள்ளார்.

அத்துடன் VP அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாவினை தனது தேவைகளிற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதும் இவர் தவிசாளராக பதவியேற்ற பின்பு VP அறக்கட்டளையானது அவருடையது எனவும் அதற்கு தலைவராக அவரும் செயலாளராக தனது மனைவியும் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் என்னிடம் உள்ளன.இது சம்பந்தமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவுகள் செய்துள்ளேன்.

தங்களது தமிழரசுக்கட்சியில் நானும் ஒரு ஆயட்கால உறுப்பினராக உள்ளேன்.எமது கட்சியானது நீதி நியாயம் மிக்க கட்சியாக இருப்பதை நான் அறிந்துள்ளேன். இருந்தபோதிலும் கடந்த மே மாதம் 1ம் திகதி அன்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் தங்களது கட்சியினால் உரைக்கப்பட்ட விடயம் யாதெனில் “எமது கட்சியானது ஊழலற்ற தமிழ் கட்சி எனவும் அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்போம்”என கூறப்பட்டது. shinedas pvt ltd கம்பெனி நிதிப்பொறுப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்படும் ஆனால் VP அறக்கட்டளையானது எனது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. 

எனவே எனக்கும் எனது மக்களுக்கும் ஏற்பட்ட அநீதி செயற்பாட்டிற்காக தங்களினாலும் தங்கள் கட்சியினாலும் எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றீர்கள் என்பதனை எனக்கும் எனது மக்களுக்கும் 7 நாட்களுக்குள் அறியத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில், அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் தமது கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றால் அது தொடர்பானவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0