உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று நிறைவுக்கு வந்தது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம், இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதன்போது, சிறைச்சாலையில் உள்ள குற்றவாளிகள் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுத்தீவு மகா வித்தியாலய மாணவியான வித்தியா கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் ‘ட்ரயல் அட்பார்’ நீதிபதிகள் குழாம், சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளிகளாகக் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

மேல் நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக் காலத்தில் குற்றவாளிகளில் ஒருவர் சிறைச்சாலையில் இருந்தபோது உயிரிழந்தார்.

அதேவேளை, மேன்முறையீட்டு விசாரணைகளின் அடிப்படையில், மேலும் இரு பிரதிவாதிகளைத் தண்டனையிலிருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட எஞ்சிய நான்கு பேருக்குமான மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.

நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0