உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதித்துறையின் பேச்சாளராக மாறிவிட்டாராம் ஜனாதிபதி.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு சீர்குலைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றச் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே எதிர்வுகூறல்களைக் கூறி வருகின்றார். அவர் நாட்டின் ஜனாதிபதியா? அல்லது நீதித்துறையின் பிரதான ஊடகப் பேச்சாளரா? என்ற சந்தேகம் எழுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி வர்ணனையாளராகச் செயற்படுவது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்.

நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை வழங்காமல் இந்த அரசு இழுத்தடிப்பு செய்து வருகின்றது.” – என்றார்.

மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அரசு முன்னெடுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

“வரி வலை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் மக்கள் வறுமையின் உச்சத்துக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

முதியோர்களின் சேமிப்புகளுக்கு வழங்கப்பட்ட 15 வீத வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாரிய அளவில் பாதித்துள்ளது.” – என்றார்.

அரசு மக்களுடன் கொண்டுள்ள சமூக ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுகின்றது என்று தெரிவித்த சஜித் பிரேமதாஸ, “மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகும். இந்த உடன்படிக்கையை மீறி அரசு தொடர்ந்து செயற்பட்டால், மாற்று அரசு என்ற ரீதியில் எதிர்க்கட்சி மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடும்.” – என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மக்களுக்கு உடனடியாக வரி நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0