கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து.!
டிக்கோயா புளியாவத்தை பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கழிவு தேயிலை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (04) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கழிவு தேயிலை ஏற்றிக்கொண்டு பயணித்த குறித்த பாரவூர்தி புளியாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சாரதி உடனடியாக மீட்கப்பட்டு டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.