யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!
கரடியனாறு பொலிஸ் பிரிவு, எரலாங்குளம் கிராம அலுவலர் பிரிவு, நவுண்டனியமாடு, எரலாங்குளம் பகுதியில் இன்று, திங்கட்கிழமை (04) நெல் வயல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 76 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.