உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்ட 120 வெளிநாட்டவர்கள்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

இராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 120 பேரில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வியாபாரத்தை அவர்கள் முன்னெடுத்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.டி. ஜனக முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0