ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அங்கு சென்று முன்னிலையாக வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“விசாரணைக்கு அழைக்கப்படுவதை அரசியல் பழிவாங்கல் என்று கூறி தட்டிக்கழிக்கக் கூடாது. ஊழல் அல்லது மோசடிகளில் ஈடுபடாதவர்கள் எதற்கும் அச்சமடைய வேண்டிய அவசியம் கிடையாது.
ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று உரிய முறையில் முன்னிலையாகி விளக்கமளிப்பதே சரியான நடைமுறையாகும்.” – என்றார்.