உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கோணேஸ்வரர் ஆலய புனித நிலங்களை மீட்க சட்டப் போராட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள புனித நிலப்பகுதிகள் ஆலயத்துக்கே சொந்தமானவை என உறுதிப்படுத்தக் கோரி, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தலைமையிலான நிர்வாக சபையினரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூலம் பின்வரும் நிலப்பகுதிகள் திருக்கோணேஸ்வர ஆலயத்துக்குச் சொந்தமானவை என வெளிப்படுத்தவும், அவற்றுக்கான பாரதீனப்படுத்தல் கட்டளையை ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்கவும் கோரப்பட்டுள்ளது.

* திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 1 ரூட் 29 பேர்ச்சஸ் காணித்துண்டு.
* பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 3 ஏக்கர் 2 ரூட் 1 பேர்ச்சஸ் காணித்துண்டு.
* கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்ச்சஸ் நிலப்பகுதி.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்குக் காலம் இடம்பெற்று வரும் பல்வேறு அரச கெடுபிடிகள், தொல்பொருள் திணைக்களத்தின் தடைகள் மற்றும் அத்துமீறிய நிலக் கையகப்படுத்தல்களைக் கட்டுப்படுத்துவதே இந்த வழக்கின் பிரதான நோக்கமாகும் என்று ஆலயத் தலைவர் தெரிவித்தார்.

இதன் மூலம் ஆலயத்தின் இராஜகோபுரக் கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0