உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நியூயோர்க்கில் ஜொலிக்கும் இலங்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கம் மற்றும் கனடா – இலங்கை புகைப்படக் கலை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ‘Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சியின் மூன்றாம் கட்டம் நியூயோர்க் நகரில் நடைபெற்றது.

இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் அனுசரணையுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் இதனை இணைந்து இந்த கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையின் அழகை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில்Beauty of Sri Lanka’ புகைப்படக் கண்காட்சி இம்முறை ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் அலுவலக பிரதானி கேர்ட்னி ரட்ரே Courtenay Rattray இதில் பிரதம அதிதியாகக் பங்கேற்றிருந்தார்.

இதன்போது இலங்கையின் சிரேஷ்ட புகைப்படக் கலைஞர்களின் விருது வென்ற பல புகைப்படங்கள், நாட்டின் எழிலை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

வெளிநாட்டுத் தூதுக்குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து இந்த புகைப்படக் கண்காட்சிக்கு இதன்போது பெரும் வரவேற்பு கிடைத்தது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கிய பங்களிப்பிற்காக, அமெரிக்க – இலங்கை புகைப்படக் கலை சங்கத்தின் தலைவர் சூரிய பெரேரா உள்ளிட்ட புகைப்படக் கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படக் கண்காட்சிக்கு இணையாக ‘பூமியைக் காப்போம்’ எனும் தலைப்பிலான சித்திரப் போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தக் கண்காட்சித் தொடரின் இறுதி நிகழ்வு இன்று 2 ஆம் திகதி வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0