உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சட்டவிரோத மது கடத்தல் — மூன்று பேர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாகொட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் யாகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்தும் 56.25 லீற்றர் அதாவது 75 போத்தல்கள் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏகல பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 67.5 லீற்றர் அதாவது 90 போத்தல்கள் கைப்பற்றப்பட்டது.மூன்று சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0