உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வங்கி அமைப்பின் மூலம் அரசுத் துறைக்கு வழங்கப்படும் கடன் அளவு எதிர்காலத்தில் குறையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதுமத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில், அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் அரச நிதி ஒருங்கிணைப்பு செயன்முறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதன் மூலம் இந்த நிலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, மத்திய வங்கி நேரடி நிதியுதவி வழங்காத சூழலில், வெளிநாட்டு நிதி ஆதாரங்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் காரணமாக அரசாங்கம் உள்நாட்டு மாற்று நிதி ஆதாரங்களை நாட வேண்டியிருக்கும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்காக போதுமான நிதி இருப்புகளைப் பராமரிப்பது அவசியம் என்றும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற இதுவே முக்கிய காரணமாக இருக்கும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0