அதிவேகமாக உயரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.!
2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதுவரை டெங்கு நோய் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பகுதிகளிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக வைத்தியரை அணுகி டெங்கு நோயா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் காய்ச்சலுக்கு பெரசிட்டமோல் மட்டும் பயன்படுத்தவும், கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.