உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிளிநொச்சியில் திடீர் வாகன சோதனை – தரமற்ற வாகனங்களுக்கு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கிளிநொச்சி பகுதியில் ஏ9 வீதியில் பயணிக்கும் வாகனங்களை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன், மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது குறிப்பாக பேருந்துகள் பயணிகள் சேவைக்கு பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதைக் கவனமாக ஆய்வு செய்த அதிகாரிகள், தரமற்ற நிலையில் இயக்கப்பட்ட சில வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பரந்தன் – முருகண்டி பாதையில் இயங்கும் பேருந்துகளுக்கும் இந்த சோதனையில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சோதனையில் கண்டறியப்பட்ட குறைகளை 14 நாட்களுக்குள் சரிசெய்து மீண்டும் ஆய்வுக்காக சமர்ப்பிக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், விபத்துகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய கூடுதல் உதிரி பாகங்களை அகற்றுமாறு சாரதிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

45 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0