உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வலிகாமம் வடக்கில் பூர்வீகக் காணிகளை விடுவிக்க கோரி மக்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக நீடித்து வரும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று இராணுவத்தின் கொமாண்டர்ஸ் பங்களா முன்பாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.


யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்தும் அப்பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், இப்பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகின்றன.தமது காணிகளை விடுவிக்கக் கோரி பல ஆண்டுகளாக போராடி வரும் உரிமையாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே நேற்றும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.போராட்ட இடத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை ஜனாதிபதியுடன் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

25 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0