உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தையிட்டியில் புதிய திருப்பம்! தனியார் காணிகளை விடுவிக்க அமைச்சரவை உபகுழு நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசேட அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

2019 ஆம் ஆண்டு தனியார் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இந்த விகாரை விவகாரம் நீண்டகாலமாக இன முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

இதனைத் தீர்ப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அண்மையில் காணி அளவீட்டுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் காணி உரிமையாளர்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளபோதும், தற்போதைய காணி அளவீடுகள் மூலம் இவை தனியார் காணிகள் என்பது ஆவண ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டும் .

இதன் மூலம் அடுத்தகட்டமாகச் சட்ட நடவடிக்கை எடுத்து நிலங்களை மீட்பது எளிதாகும் எனச் சுகிர்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியல் இலாபத்திற்காகச் சிலர் போராட்டங்களை முன்னெடுத்தாலும், சாதுரியமான நகர்வுகள் மூலம் மக்களின் நிலங்களை மீட்டெடுப்பதே தமது இலக்கு என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0