உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

களுத்துறை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொலிஸார் உள்ளிட்ட உரிய நிறுவனங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், வரி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தரவுத் தொகுப்பிற்கு எந்தவித சேதமும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக் தேவி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைவாகச் சீர்செய்து, தொலைதூரத் தொடர்பாடல் ஊடாகத் தரவுத் தொகுப்பு இணைப்புகளை வழங்கவும், அலுவலக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவரவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அலுவலகம் வழமைக்குத் திரும்பும் வரை, களுத்துறை பிரதேச அலுவலகத்தில் அவசர சேவைகளைப் பெற எதிர்பார்க்கும் பொதுமக்கள், தமக்கு அருகிலுள்ள பிற பிரதேச அலுவலகங்கள் அல்லது தலைமை அலுவலகத்தின் ஊடாகத் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

42 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0