மீண்டும் மீண்டும் நாவலப்பிட்டி நகரில் வெள்ள நீர்!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா கண்டி மாவட்டத்தில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மலையக பகுதியில் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக நாவலப்பிட்டி நகரில் உள்ள கண்டி கம்பளை வீதியிலும் பேரூந்து தரிப்பிடத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழை நீர் புகுந்தது வருகிறது.
இதன் காரணமாக பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு கழிவு நீருடன் கலந்து வெள்ள நீர் உட் புகுவதாலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வாகன சாரதிகள், நடத்துனர்கள், பாதசாரிகள், பயணிகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் பேருந்து நிலைய பகுதியில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.