உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மீண்டும் மீண்டும் நாவலப்பிட்டி நகரில் வெள்ள நீர்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா கண்டி மாவட்டத்தில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மலையக பகுதியில் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நாவலப்பிட்டி நகரில் உள்ள கண்டி கம்பளை வீதியிலும் பேரூந்து தரிப்பிடத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழை நீர் புகுந்தது வருகிறது.

இதன் காரணமாக பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு கழிவு நீருடன் கலந்து வெள்ள நீர் உட் புகுவதாலும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வாகன சாரதிகள், நடத்துனர்கள், பாதசாரிகள், பயணிகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் பேருந்து நிலைய பகுதியில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0