உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2.5 மில்லியன் டொலர் மோசடி: இடைநிறுத்தப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் இன்று உயிர்மாய்ப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித் திருட்டு தொடர்பில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த உதவிப் பணிப்பாளர் ஒருவர் குளியாப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இது குறித்த உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.

அரச நிதியை மோசடியாகப் திசைதிருப்பியதாகக் கூறப்படும் பாரிய இணையத் திருட்டுச் சம்பவம் தொடர்பில், மேற்படி அதிகாரி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் தனது கடமைகளிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், அதனுடன் தொடர்புடைய சூழ்நிலைகளை ஆராயவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய வங்கியின் நிதி மாயமானது குறித்து ஏற்கனவே அரசியல் பிரமுகர்கள் கவலை வெளியிட்டிருந்த நிலையில், இந்த உயிரிழப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

39 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

22 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0