உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த அமைத்த பொறியில் சிக்கி விவசாயியே உயிரிழப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6 ஆம் கட்டைப் பகுதியில், விவசாய நிலமொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 57 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

மொரவெவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வனவிலங்குகளிடமிருந்து தனது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அவரே சட்டவிரோதமான முறையில் இந்த மின்சாரக் கம்பியை இழுத்து மின்சாரம் பாய்ச்சியிருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது, தான் அமைத்திருந்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராத விதமாகத் தட்டுண்டமையாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகினறது.

வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இவ்வாறான சட்டவிரோத மின்வேலிகளை அமைப்பது ஆபத்தானது மாத்திரமன்றி, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று  தெரிவித்த மொரவெவ பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6 ஆம் கட்டைப் பகுதியில், விவசாய நிலமொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 57 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

மொரவெவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வனவிலங்குகளிடமிருந்து தனது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அவரே சட்டவிரோதமான முறையில் இந்த மின்சாரக் கம்பியை இழுத்து மின்சாரம் பாய்ச்சியிருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றபோது, தான் அமைத்திருந்த மின்சாரக் கம்பியில் எதிர்பாராத விதமாகத் தட்டுண்டமையாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகினறது.

வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க இவ்வாறான சட்டவிரோத மின்வேலிகளை அமைப்பது ஆபத்தானது மாத்திரமன்றி, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்று பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறான பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று  தெரிவித்த மொரவெவ பொலிஸார், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

44 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

42 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0