தையிட்டி திஸ்ஸ விகாரை காணி அளவீடு நிறுத்தம்.!
தையிட்டி திஸ்ஸ விகாரை காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்கள் உறுதிப்படுத்திய கடிதம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதம் உத்தியோகபூர்வ கடிதத்தை வழங்குமாறு கோரி காணி அளவீட்டிற்கு உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை.
ஏனைய உயர் அதிகாரிகள் அந்தந்த திணைக்கள உத்தியோக முத்திரைகளை ஏனைய அதிகாரிகள் பயன்படுத்த முடியாது என்றும் தனி கடிதமாக பிரதேச செயலாளரின் உத்தியோக முத்திரையுடன் கடிதம் வழங்கிய போதும் அதை ஏற்க மறுத்தனர்.
அதனால் காணி அளவீடு முடிவுகளின்றி நிறுத்தப்பட்டது.
இன்றைய தினம் அரசாங்கம் காணி அளவீட்டை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்த போதும் காணி உரிமையாளர்கள் அரசை நம்பினாலும் காணி அளவீடு தொடர்பாக உத்தியோகபூர்வ கடிதத்தை எதிர்பார்த்து காணி அளவீட்டிற்கு சம்மதிக்கவில்லை.
இருந்தும் அரசாங்கம் காணியை உரிய ஆவணத்துடன் மீண்டும் அளவீட்டிற்கான ஏற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கின்றார்கள்.



