நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம்.!
யாழ்ப்பாணம் வடராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திதிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
இராணுவம் வெளியேறுவதை யாரிடமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்காது திடீரென வெளியேறியுள்ளனர்.
25 வருடங்களுக்கு மேலாக கைப்பற்றியிருந்த குறித்த ஆலயப் பகுதியிலிருந்து நேற்று இராணுவம் வெளியேறியதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளது.