உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை வழக்கு; பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பாதாள உலகக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சட்டத்தரணிக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் உத்தரவுக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் அவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சதித்திட்டங்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்தச் சட்டத்தரணி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

பாதாள உலகக் குழுவினரின் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த விவகாரம், சட்டத்தரணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வழக்கின் முன்னேற்றம் குறித்த அறிக்கை அடுத்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

41 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

41 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

57 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0