சற்றுமுன் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து.!
பலாங்கொடை பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை 8.45 க்கு பலாங்கொடை பொகவந்தலாவிற்கு இடையில் விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் காயமடைந்த 25 மாணவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
