உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
22 பார்வைகள்

இலங்கையில் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறியவும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது.

வீதிகளில் அபாயகரமான முறையிலும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துபவர்களைக் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக, பொலிஸ் தலைமையகம் விசேட WhatsApp இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை 070-4755600 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.

இந்தச் சேவையானது போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும்.

மேலும், இது 24 மணிநேரமும் செயற்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ காட்சிகளைப் பதிவேற்றும் போது, விசாரணைகளை இலகுவாக்கும் வகையில் பின்வரும் விபரங்களைக் கட்டாயம் குறிப்பிடுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்:

அதன்படி, சம்பவம் இடம்பெற்ற திகதி, சம்பவம் நடைபெற்ற இடம், குறித்த பகுதிக்குரிய பொலிஸ் பிரிவு என்பன கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும் .

பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பு மூலம் வீதி விபத்துகளைக் குறைக்கவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பொலிஸ் தலைமையகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0