உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு: 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் திணைக்களத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்னவின் ஆலோசனையின் கீழ், மதுவரி விசேட சோதனைப் பிரிவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

சுமார் 30 அதிகாரிகளைக் கொண்ட 4 விசேட குழுக்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டன.

இதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் (Security Stickers) அனைத்தும் முற்றிலும் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஏய்ப்பு செய்யும் நோக்கில், இந்தப் போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானத் தொகுதியின் சந்தைப் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதுபானங்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எப்படிக் கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து மதுவரித் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் இவ்வாறான போலி மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

2 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

53 0 0