சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் கைது.!
மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை மாலபே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தலாஹேன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாலபே பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று வெள்ளிக்கிழமை (10) காலை, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 86 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.