உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மன்னார் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் சிறப்பு புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக வணிகத் துறையில் இலுப்பைக்கடவை மகா வித்தியாலயத்தின் மாணவன் டி. டிதுர்சன் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றிருந்தார்.

அத்துடன் அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவன் த. லினுசன் கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 12 நிலையையும் பெற்றிருந்தார். எனவே அம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு. அந்தோணி வாஸ் ஜூட் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விழாவின் பிரதம விருந்தினர்களாக மடு கல்வி வலயத்தின் பணிப்பாளர் Ac.வலரென் மற்றும் ஸ்தாபனம் மற்றும் முகாமைத்துவத்தின் வலய பிரதிநிதி – ஜூட் இந்திரகுமார் அவர்களும், தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் எஸ் ஜெகன், வலயக் கல்வி ஆசிரிய ஆலோசகர் ஸ்டான்லின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வில் மாணவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

51 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0