உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மக்கள் ஆணையை மதிப்பதாக இருந்தால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சருக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பதாக இருந்தால், அரசிலுள்ள 159 உறுப்பினர்களும் இந்த ஊழல் மோசடிக்கு ஆதரவாக முன்னிற்க முடியாது.

இந்த விடயத்தில் விலைமனு கோரப்பட்ட விதம் தவறானது என்பது கணக்காய்வாளர் அறிக்கையிலேயே தெளிவாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட விலைமனு மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் முறையற்றவை.

இது குறித்து நாம் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதும், சமூகத்தில் பேசப்பட்ட போதும் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ அதனைச் செவிமடுக்கவில்லை. தாங்கள் செய்த செயல் சரியானது என்றே அவர்கள் தொடர்ச்சியாக வாதிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வெளிவரும் அனைத்து உத்தியோகபூர்வ அறிக்கைகளும் இந்த மோசடி நடைபெற்றுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, அமைச்சருக்காக அரசு முன்னின்று வாதிடக்கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

50 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

58 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0