உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கணினி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை வருகை தந்த 35 மற்றும் 31 வயதுடைய சீன நாட்டுத் தம்பதியினரே, விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் சீனாவிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களது பயணப் பொதிகளிலிருந்து 84 பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள், 10,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 40 கிலோகிராம் சீனப் பாக்கு என்பன மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சீனப் பிரஜைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

20 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

58 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

51 0 0