கெங்காதேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு.!
இன்றைய தினம் மதியம் 12:30 மணியளவில் கெங்காதேவி நற்பணி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பருத்தித்துறை பண்ணையம்பதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் நற்பணி மன்றத்தின் தலைமை காரியாலயத்தை ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் அவர்கள் நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் நற்பணி மன்றத்தின் தன்னார்வ தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் நற்பணி மன்றத்தின் மூலம் கல்வி சார் செயற்பாட்டுகள் மற்றும் கலை மற்றும் ஆன்மீக சார் செயற்பாட்டுகள் இடம்பெறவுள்ளதுடன் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றும் வறுமையின் நிமிர்த்தம் தமது அன்றாட வாழ்வினை நகர்த்தி செல்ல சிரமப்படும் மக்களுக்கு உதவிகள் செய்ய உள்ளனர்.


