உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கட்டையர்குளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் தவிசாளர் கலந்துரையாடல்…!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
40 பார்வைகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டினூடாக சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடலொன்று கட்டையர்குளம் கிராமத்தில் ஏப்ரல் 04 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவருமாகிய பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பகுதி மக்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கோரிக்கைகளை கேட்டறிந்த தவிசாளர் எதிர்காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் உடனடியாக கட்டையர்குளம் கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபாவினை அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்காக ஒதுக்கீடு செய்வதாகவுக் இதன்போது தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சந்திப்பில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பகுதி மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0