கட்டையர்குளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் தவிசாளர் கலந்துரையாடல்…!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டினூடாக சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடலொன்று கட்டையர்குளம் கிராமத்தில் ஏப்ரல் 04 ஆம் திகதி நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார உறுப்பினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவருமாகிய பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பகுதி மக்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கோரிக்கைகளை கேட்டறிந்த தவிசாளர் எதிர்காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் உடனடியாக கட்டையர்குளம் கிராமத்திற்கு 1 மில்லியன் ரூபாவினை அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்காக ஒதுக்கீடு செய்வதாகவுக் இதன்போது தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த சந்திப்பில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பகுதி மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.