உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஒரு வைத்தியரை உருவாக்க மக்களின் வரிப் பணத்திலிருந்து 60 இலட்சம் செலவு – அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

இலங்கையில் ஒரு வைத்தியரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுகின்றது என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.


கிரிபத்கொடையில் நடைபெற்ற தனியார் வைத்தியசாலை திறப்பு விழாவில் உரையாற்றிய அவர், மருத்துவப் பீடத்தில் கல்வி கற்று வெளியேறும் ஒரே ஒரு வைத்தியருக்காக அரசாங்கம் பெரும் செலவினை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.


ஒரு பொறியியலாளரை உருவாக்க சுமார் 30 இலட்சம் ரூபா செலவிடப்படுவதுடன், அதற்கு இரட்டிப்பாக வைத்தியர்களுக்காக செலவிடப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.இலவச சுகாதாரச் சேவையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதையும், ஒருவரின் உயிர் அவரின் பணநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


மேலும், நாட்டில் சுமார் 35,000 முதல் 38,000 வரை வைத்தியர்கள் உள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் அரசு வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்றனர் என்றும், சமூகத்திற்கான அவர்களின் பொறுப்பு மிக முக்கியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0