டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்.!
கண்டி மாவட்டம் கங்கஹியல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டிய தொலஸ்பாகை ரக்ஷாவ கிராமத்தில், டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு அவசர உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில், சுயசக்தி நிறுவனம் ஊடாக கூடாரங்கள் மற்றும் சீட் உள்ளிட்ட அனர்த்த முன்னெற்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ச்செல்வி மற்றும் சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் அழகர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், அப்பிரதேச அரச அதிகாரிகளும் நேரடியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதுடன், அவர்களை மீள குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.