உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கண்டி மாவட்டம் கங்கஹியல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டிய தொலஸ்பாகை ரக்ஷாவ கிராமத்தில், டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு அவசர உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில், சுயசக்தி நிறுவனம் ஊடாக கூடாரங்கள் மற்றும் சீட் உள்ளிட்ட அனர்த்த முன்னெற்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் சார்பில் தமிழ்ச்செல்வி மற்றும் சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் அழகர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், அப்பிரதேச அரச அதிகாரிகளும் நேரடியாக கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதுடன், அவர்களை மீள குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0