உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 வாகனங்கள் மீட்பு – மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

சட்டவிரோதமான பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், விசேட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மீட்கப்பட்ட வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு காவல்துறை மற்றும் முப்படை உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான கடவத்தை, மீகஹவத்தமொனராகலை ஆகிய இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும், விசாரணைகளின் போது 40-க்கும் அதிகமான சட்டவிரோத வாகனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதால், அவற்றை மீட்பதற்கான விசேட சோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை, தங்களது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் 0112947780 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.


இந்த வாகனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளை, கப்பம் கோருதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.கைது செய்யப்பட்ட மூவரும்தொடர்புடைய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0