உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

புனித வெள்ளியை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதயாத்திரை மற்றும் ஆராதனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சர்வ வல்லமையுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்த தினமான புனித வெள்ளியை முன்னிட்டு, அவரது பாடுகளை நினைவுகூரும் விசேட பாதயாத்திரை மற்றும் ஆராதனை நிகழ்வு கொழும்பில் விமரிசையாக நடைபெற்றது.


“இயேசு ஜீவிக்கிறார்” சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பு 14 ஆமர் வீதியில் அமைந்துள்ள பெர்னாந்து பிளேசில் பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமானது.


திரளான இறை மக்கள் பக்தியுடன் கலந்து கொண்ட இந்த பாதயாத்திரை, மருதானை வழியாக பயணித்து கொழும்பு ஹயிட் பார்க் மைதானத்தை சென்றடைந்தது.பின்னர் நடைபெற்ற விசேட ஆராதனையில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பும் மனிதகுலத்திற்கு அவர் வழங்கிய மன்னிப்பும் தியானிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளை கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் C.V. இராஜேந்திரம் ஆகியோர் முன்னின்று வழிநடத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஒருமித்த மனதுடன் ஆராதனை நடத்தப்பட்டதுடன், புனித வெள்ளியின் ஆன்மீக முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0