மஸ்கெலியாவில் சட்டவிரோத மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் கைது.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோர்த்ரிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (03) பெறப்பட்ட இரகசியத் தகவலின் அடிப்படையில் மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றது.
இதன்போது, மாணிக்கக் கற்கள் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
கைதானவர் 51 வயதுடைய மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.