கிளிநொச்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து கருத்தாடல் அரங்கு.!
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் தொடர்பான கருத்தாடல் அரங்கு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உயிரிழந்தோருக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்டதுடன், கூட்டணியின் துணைத்தலைவர்களால் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கருத்தாடலில், மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் தொடர்பான பல்வேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற மூத்த நிர்வாக அதிகாரி இரேனியஸ் செல்வின், கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், சமூக ஆய்வாளர் பெரியசாமி முத்துலிங்கம், கொள்கை பகுப்பாய்வாளர் திசாநாக்க, கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் வீரசக்தி தனபாலசிங்கன் ஆகியோர் தமது கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இந்நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
