உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிளிநொச்சியில் அதிகாரப் பகிர்வு குறித்து கருத்தாடல் அரங்கு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் தொடர்பான கருத்தாடல் அரங்கு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.

எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உயிரிழந்தோருக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கப்பட்டதுடன், கூட்டணியின் துணைத்தலைவர்களால் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.


இந்த கருத்தாடலில், மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் தொடர்பான பல்வேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன. ஓய்வு பெற்ற மூத்த நிர்வாக அதிகாரி இரேனியஸ் செல்வின், கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், சமூக ஆய்வாளர் பெரியசாமி முத்துலிங்கம், கொள்கை பகுப்பாய்வாளர் திசாநாக்க, கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் வீரசக்தி தனபாலசிங்கன் ஆகியோர் தமது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இந்நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0