“பிரஜாசக்தி 2026” வீடமைப்பு திட்டம்: அட்டாளைச்சேனையில் பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலை வழங்கல்.!
“தமக்கானதோர் இடம் – அழகான வாழ்க்கை” எனும் அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயனாளிகளுக்கான வீடுகளுக்கான முதற்கட்ட காசோலைகள் நேற்று (03) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிற்கும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 150,000 ரூபாய் காசோலைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
மேலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அப்கார், கணக்காளர் எப்.எம். பர்ஹான், தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்